Posts tagged: love

காதல் தொடர்ச்சி…

please visit Kaathal aarambam before reading this…

காதல் என்னும் ஆற்றில், திருமணம் என்ற படகில்,
மூழ்கினாலும் கவலை இல்லை , காதலில் தானே மூழ்குகிறோம்.

சினிமாவுக்குப் போகலாமென்று, கிளம்புகையில் மழை.
சோகமாய் அமர்ந்துவிட்டாய் நீ. வெயில் அடிக்கத்துவங்கியது.
வானவில் தோன்றியவுடன், பார்ப்பதற்காக உன்னை அழைத்தேன்,
எங்கே காணோம், என்று மீண்டும் சிணுங்கினாய் அழகாய்.

இதுவரை நீ வானவில்லை பார்த்திருக்கமாட்டாய் , சரியா என்றேன்,
ஆமாம் என்றாய் நீ கவலையாக…
சூரியன் இருக்கும் போது , நட்சத்திரம் தெரியாது,
அது போல தான் நீ இருக்கும் பொது, வானவில் தெரியாது.

வீட்டுக்குளே போ, நானாவது வானவில்லை பார்கிறேன் என்றேன்.
உண்மை தான், ஆனால் ஒரு வித்யாசம் உண்டு.
வானவில் வெறும் வண்ணங்களின் சேர்க்கை,
ஆனால் நீ, அழகுகளின் சேர்க்கை.

இப்பொழுது பார், வானம் வானவில்லை பிரதிபலிக்கவில்லை ,
உன்னை தான் பிரதிபலிக்கிறது.
என்ன என்றாய் கண்களால் ?
நீ நீல நிற சேலை அணிந்தவுடன் வானவில்லும் நீலமாகி,

வானமும் உன் சேலையைத் தான் பிரதிபலிக்கிறது
என்று உன்னை சுற்றிக்கொண்டேன்.
உன் சேலையின் வைர ஊசிகளைப் போல
செல்லமாய்க் கிள்ளி விட்டு அழகைப் பரப்பச் சென்றாய்…

காதல் ஆரம்பம்

எங்கள் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டினார் அப்பா,
எனக்கு பிடிக்கவில்லை. அந்த பழைய வீடு எனக்கு பிடிக்கும்.
புது வீடு மிகவும் அன்னியமாக இருந்தது. இரண்டு மாடி வீடு.
வெறுப்புடன் தான் தொடங்கினேன் அங்கு வசிக்க.
மேல் மாடிக்கு ஒரு தேவதை குடி வரும் வரை,
என் அப்பா செய்த உருப்படியான வேலை இது தான்.

வந்த உடனே கண்கள் உரச, நான் சொக்கித் தான் போனேன்.
தேவதை எங்கள் வீட்டில் குடி புகுந்தாள்
என சுவரொட்டி அடிக்க மனம் துடித்தது.
காலம் செல்லச் செல்ல, சிறிது முன்னேற்றம்,
பேசத் தொடங்கினோம். எனக்கு பிடித்த வண்ணமே அவள் இருந்தாள் ,
இல்லையென்றால், அவளுக்கு பிடித்த வண்ணம் நான் மாரிவிட்டேனோ ?

காலம் இன்னும் வேகமாய் சுழன்றது, காதல் மனதில் சுழன்றது.
கடிதங்கள் எழுதினேன், கவிதைகள் எழுதினேன்,
அதைவிட முக்கியம் அவைகளை உன்னிடம் கொடுத்தேன்.
காதல் பிறந்தது, காதலியாய் நீயும் கிடைத்தாய்.
வீடு மாறினாய், வாசம் மாறினாய், வாக்கு மாறவில்லை நாம்.
நன்கு படித்தேன், வாழ்வில் உயர்ந்தேன், உன்னை கரம் பிடித்தேன்.

ஆரம்பமானது நம் காதல் வாழ்வு.

ஆரம்பித்தது, தொடரும் இனி பகுதிகளாக….